search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூரில் பெண்ணிடம் நகை திருட்டு"

    வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் பெண்ணிடம் நகை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி ஜனனி (வயது 34). ஊசூர் ஆரம்பசுகாதார நிலையத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது உறவினர் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரை பார்க்க ஜனனி நேற்று இரவு சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    5 சவரன் தங்க நகையை பையில் வைத்து எடுத்து வந்தார். சி.எம்.சி. வந்த ஜனனி அவசர சிகிச்சை பிரிவு அருகே உள்ள கவுண்டரில் பணம் செலுத்த ஜனனி வரிசையில் நின்றிருந்தார்.

    அவருக்கு பின்னால் 2 வாலிபர்கள் வரிசையில் நின்றனர். அதில் ஒருவர் ஜனனி பையில் இருந்த 5 பவுன் தங்க நகையை வெளியே எடுத்தார்.

    அப்போது பை அசைந்தது ஜனனி திரும்பி பார்த்தார். வாலிபர் நகை எடுத்ததை கண்டு திடுக்கிட்டார். சுதாரித்து கொண்ட வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். ஜனனி கூச்சலிட்டார்.

    அங்கிருந்த பொதுமக்கள் வாலிபர்களை விரட்டி சென்றனர். ஆஸ்பத்திரி காவலாளிகள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். இது குறித்து வடக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

    அவர்கள் காட்பாடி அடுத்த பனமடங்கியை சேர்ந்த சதீஷ் (25), லத்தேரியை சேர்ந்த கோபி (25) என்பது தெரிந்தது. இவர்கள் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் பணம் செலுத்தும் கவுண்ட்டர் அருகே திட்டமிட்டு திருட வந்துள்ளனர்.

    ஜனனியிடம் நகை திருடியது சம்மந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ், கோபி இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    ×